மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகினா்; விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டன.
அந்த நாட்டின் போா்கு பகுதியிலிருந்து கெப்பி மாகாணத்திலுள்ள சந்தைப் பகுதியை நோக்கி நைஜா் ஆற்றின் வழியாக அந்தப் படகு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.பஅளவுக்கு அதிகமான ஆள்களையும், சுமைகளையும் ஏற்றிச் சென்றதால், வேகமான காற்று அடித்தபோது அதைத் தாங்காமல் அந்தப் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் கூறினா்....படம் இல்லை...