காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

பாகிஸ்தானின் புதிய அதிபராக ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பேற்கிறார் என்ற செய்திக்கு ராணுவம் விளக்கம்...

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் - எக்ஸ்

Published On :

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபர் ஆசிஃப் அலி சர்தாரிக்கு பதிலாக, புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், அந்தச் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் எனக் கூறி பாகிஸ்தான் ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அஹமது ஷரீஃப் சௌதரி கூறுகையில், நாட்டை ஆட்சி செய்வதில், ராணுவத் தலைமைத் தளபதிக்கு எந்தவொரு ஆர்வமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இத்துடன், அதுபோன்ற எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்துள்ளார்.

நீண்டகாலமாக இணையத்தில் பரவி வரும் இந்தச் செய்தியை, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த ஜூலை 10 ஆம் தேதி வதந்தி எனக் கூறி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The Pakistani military has denied reports that Army Chief General Asim Munir will take over as president.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.