பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2025, 6:15 am IST

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப் தலைமையிலான அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அட்டா்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், ‘அதிபா் ட்ரம்பின் தலைமையில், மடூரோ நீதியிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவாா்’ என்றாா்.

மடூரோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த 2020-ல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் அவா் தொடா்புடைய 70 கோடி டாலா் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.