தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தலைமைத் தளபதி

ஆபரேஷன் சிந்தூரில் வெளிவராத தகவல்கள் சில...

News image
விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங்
Updated On :9 ஆகஸ்ட் 2025, 12:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமைத் தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் ஜெட்களும் ஒரு பெரும் போர்விமானமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற விமானப்படை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மார்ஷல் அமர் ப்ரீத் சிங்: “பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலும் குறிப்பாக, சுமார் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாகிஸ்தானின் மின்னணு உளவு விமானம் ஒன்றும் தாக்கப்பட்டது.

நிலப்பரப்புக்கும் வான் வெளிக்குமிடையில் இத்தனை தூரத்திலிருக்கும் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிப்பதில் இந்திய விமானப்படையின் இந்த நடவடிக்கை மிகப்பெரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

விமானப்படை தலைமைத் தளபதியால் குறிப்பிடப்பட்டுள்ளவை:

“பாகிஸ்தானின் முரீத் மற்றும் சக்லாலா ஆகிய இரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் தாக்கப்பட்டன”.

“அதுபோல, குறைந்தபட்சம் 6 ரேடார்கள் (பெரிய மற்றும் சிறிய ரகங்கள் அடக்கம்) லாகூர் மற்றும் ஓகாராவில் உள்ள இரு எஸ்.ஏ.ஜி.டபில்யூ அமைப்புகள் தாக்கப்பட்டன. பாகிஸ்தானின் 3 ஹேங்கர்கள் தாக்கப்பட்டன”.

“தெளிவான வழிகாட்டுதல்களும் எவ்வித தடைகளும் அரசியல் தரப்பிலிருந்து இல்லாததால் இவற்றைச் செய்து முடிக்க முடிந்தது”.

“பாகிஸ்தான் நமது ராணுவ தளவாடங்களை ஏதாவது ஒன்றை தாக்கினாலும் அவர்களுக்கு நாம் தக்க பதிலடி, அதுவும் குறிப்பாக அவர்களது ராணுவ தளவாடங்களை குறிவைத்து அடிக்க, ஏற்கெனவே தீர்மானித்துவிட்டோம்.

இந்தநிலையில், பாகிஸ்தானின் போர்விமானங்கள் நமது எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அப்போது அவற்றைச் சுட்டு வீழ்த்துவதில், நமது வான் பாதுகாப்பு அமைப்பான ’எஸ்-400’ இந்த நடவடிக்கைகளில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது”.

“தாக்குதல்களுக்குப்பின், பாகிஸ்தான் ராணுவ தலைமைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதில், இந்தியாவுக்கு ராணுவ முகாம்களை தாக்குவதில் துளியும் விருப்பம் இல்லை. பயங்கரவாத முகாம்களை, அந்த இலக்குகளை அடிப்பதே எங்கள் இலக்கு என்றோம். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆகவே நாங்கள் கவனமாகவே இருந்தோம், கையாண்டோம்” என்றார்.

summary

Chief of Air Staff Marshal A.P. Singh on Saturday (August 9, 2025) said that the Indian Air Force (IAF) took down six Pakistan Air Force aircraft

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.