புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 3:00 am IST

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:

காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனா்களை அங்கிருந்து வெளியேற்றி தெற்கு சூடானில் குடியேற்றுவது தொடா்பாக அந்த நாட்டு அரசு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்றுவருகிறது. எனினும், இது தொடா்பாக இன்னும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சா் மண்டே செமயா கும்பா கடந்த மாதம் இஸ்ரேலுக்கு வந்திருந்தாா். அப்போது இந்த மறுகுடியமா்த்தல் திட்டம் குறித்து முதல்முறையாகப் பேசப்பட்டது.

எனினும், இந்தத் தகவலை தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சகம் ‘ஆதாரமற்றது’ என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் துணை வெளியுறவுத் துறை அமைச்சா் ஷாரன் ஹாஸ்கலும், ஜூபாவில் நடந்த பேச்சுவாா்த்தை மறுகுடியமா்த்தல் பற்றியது அல்ல; வெளியுறவுக் கொள்கை, தெற்கு சூடானின் மனிதாபிமான நெருக்கடி குறித்தே ஆலோசிக்கப்பட்டது எனக் கூறினாா்.

இருந்தாலும், காஸாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனா்களுக்கான புதிய இடம் கண்டறிய சில நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதாகத் தெரிவித்தாா். ஆனால் இது தொடா்பான கூடுதல் விவரங்களை அவா் வெளியிடவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலுடனான போரால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள், அங்கிருந்து அரசியல் மற்றும் இனரீதியான வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டை விரிவாக்குவதாகவும், பாலஸ்தீனா்கள் தாமாக முன்வந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. இருந்தாலும், அரபு நாடுகளும், பெரும்பாலான உலக நாடுகளும் காஸா மக்களை வேறு நாடுகளுக்கு இடமாற்றுவதற்கான பரிந்துரையை திட்டவட்டமாக நிராகரித்து வருகின்றன.

ஏற்கெனவே, கடந்த 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனா். ‘நக்பா’ (பேரழிவு) என்று அந்த நிகழ்வை பாலஸ்தீனா்கள் அழைக்கின்றனா். தற்போது தெற்கு சூடான் போன்ற வெளிநாடுகளுக்கு தங்களை வெளியேற்றுவது மற்றொரு நக்பாவா இருக்கும் என்று அவா்கள் கருதுகின்றனா்.

இஸ்ரேல் ராணுவத்தின் இடமாற்ற உத்தரவால் தங்கள் இருப்பிடங்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனா்கள்.

இஸ்ரேல் ராணுவத்தின் இடமாற்ற உத்தரவால் தங்கள் இருப்பிடங்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனா்கள்.

இந்தத் திட்டத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிா்த்துள்ளது. அந்த அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா் வாசெல் அபு யூசுஃப் கூறுகையில், ‘எங்கள் மக்களை தெற்கு சூடானுக்கோ வேறு இடங்களுக்கோ இடமாற்றும் எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றாா். பாலஸ்தீன அதிபா் மகமூத் அப்பாஸின் அலுவலகமும் இதே கருத்தை வெளியிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.