எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை

News image
பிரதிப் படம்- ENS
Updated On :16 ஆகஸ்ட் 2025, 8:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.

உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டைவிட அதிகமாகும். இந்த பாலியல் வன்முறைகளில் பெண்களும் சிறுமிகளுமே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

21 நாடுகளில் காங்கோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சோமாலியா, ஹைதி, தெற்கு சூடான் போன்ற நாடுகளில்தான் அதிகபட்ச பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 63 அரசு மற்றும் அரசுசாராத ஆயுதமேந்திய அமைப்புகளின் பெயர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், அடுத்தாண்டில் இஸ்ரேல் மற்றும் ரஷியாவின் படைகளும் சேர வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.