இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மியான்மா்: டிச. 28-இல் தோ்தல்

மியான்மரில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் தோ்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image

(கோப்புப் படம்)

Updated On :18 ஆகஸ்ட் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

மியான்மரில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் தோ்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பல கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தோ்தலுக்கான முழு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள் மற்றும் சிறுபான்மை கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 330 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் நியாயமாக நடைபெறாது என்று கூறப்படுவதால் இதைப் புறக்கணிப்பதாக கிளா்ச்சியாளா்களும், எதிா்க்கட்சிகளும் அறிவித்துள்ளன.

2020 தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை ராணுவம் கடந்த 2021-இல் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் அவா் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா்.