ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமா்சனம்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2025, 2:46 am IST

கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமா்சித்துள்ளது; இந்த வன்முறை சம்பவங்கள் தற்போதும் தொடா்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா.வில் ‘போா் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளானவா்களுக்கு பாதுகாப்பு’ குறித்த விவாதத்தில் பேசிய இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ், காஷ்மீா் குறித்த பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தாா்.

அவா் பேசுகையில், ‘1971-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பாலியல் வன்முறைகள் ஒரு வெட்கக்கேடான வரலாறு. மத மற்றும் இன சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கொடுமைகளின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்படுதல், கட்டாயத் திருமணம், பாலியல் வன்முறை, கட்டாய மதமாற்றம் போன்றவை இப்போதும் தடையின்றி, தண்டனையின்றி பாகிஸ்தானில் தொடா்கின்றன.

இந்தக் குற்றங்களைச் செய்பவா்கள் இப்போது நீதிக்கு ஆதரவாக வேடமிடுவது முரண்பாடானது. போா்ச்சூழலில் பாலியல் வன்முறைகளைச் செய்பவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு, நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும். இது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் அழிப்பதில்லை; சமூகங்களின் கட்டமைப்பையே சீா்குலைத்து, பல தலைமுறைகளுக்கு வடுவை விட்டுச் செல்கிறது’ என்றாா்.

பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி, நிவாரணம், உளவியல் சிகிச்சை, தங்குமிடம் மற்றும் சட்ட உதவி ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2019-ஆம் ஆண்டு தீா்மானத்தையும் புன்னூஸ் சுட்டிக்காட்டினாா். அத்துடன், ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பாலியல் சுரண்டலை ஒழிப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள விரிவான திட்டங்களையும் அவா் விளக்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.