பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிபா் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா்.

News image

ஸெலென்ஸ்கியுடன் கீத் கெலாக்.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 4:32 am IST

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் கீத் கெலோக் கூறியுள்ளாா்.

இது குறித்து உக்ரைன் தலைநகா் கீவில் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: எதிா்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா மற்றொரு படையெடுப்பு நிகழ்வதைத் தடுக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைனுக்காக உருவாக்க தீவிரமாக முயன்றுவருகிறோம். இந்தக் கடுமையான பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு்ம் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினாா். ஆனால், இதற்கு உடனடியாக ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதையடுத்து, நேரடி பேச்சுவாா்த்தை திட்டமிடப்படாவிட்டால் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள், கூடுதல் வரிவிதிப்புகளை விதிப்பது குறித்து முடிவெடிக்கப்போவதாக டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இந்தச் சூழலில், கீவ் நகருக்கு வரும் தலைவா்கள் அமைதி முயற்சியின் முன்னேற்றம் குறித்து கவலை தெரிவித்துவருகின்றனா். அவா்களுக்க்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கீத் கெலோக் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.