உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!

இலங்கையில் முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

அதுரலியே ரத்தன - ராஜித சேனாரத்ன - Instagram

Published On :

இலங்கையில், குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 2 முக்கிய அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தில் சரண்டைந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் முன்னாள் மீன்வளத் துறை அமைச்சரான மூத்த அரசியல் தலைவர் சேனாரத்ன மீது, கடந்த 2013 ஆம் ஆண்டு கொரிய நிறுவனம் ஒன்றுக்கு அவர் வழங்கிய மணல் அள்ளும் ஒப்பந்ததினால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதேபோல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புத்த துறவியுமான அதுரலியே ரத்தன கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மற்றொரு புத்த துறவியான வெடினிகாமா விமலாதிஸ்ஸா என்பவரைக் கடத்தி சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த அவர்கள் இருவரின் மீதான வழக்குகளின் விசாரணை நடைபெறும் நீதிமன்றங்களில் இன்று (ஆக.29) அவர்கள் சரணடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சேனாரத்னவை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரையிலும், அதுரலியே ரத்தனவை செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலும் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

முன்னதாக, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், பிணையில் அவர் விடுதலைச் செய்யப்பட்டபோதும், இலங்கையின் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that two former members of parliament in Sri Lanka have been arrested after surrendering to court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.