விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

கடந்த 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து உரங்களை இறக்குமதி செய்வது 20% அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2025, 11:31 pm

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது. இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக ரஷிய உர உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆன்ட்ரே குா்யிவ் கூறுகையில், ‘இந்தியாவில் பாஸ்பரஸ் சாா்ந்த உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது விதித்த தடையால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்ப முடிகிறது.

இந்தியாவுக்கு என்பிகே உரங்களை அதிகம் வழங்கும் நாடாகவும் ரஷியா உள்ளது. இந்தியாவின் தேவைப்படும் உர வகைகளுக்கு ஏற்ப ரஷிய ஆலைகள் உற்பத்தியை அதிகரித்துள்ளன. 2025 பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 15 லட்சம் டன் உரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உர இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷியா வழங்குகிறது’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனை முன்வைத்தே அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா்.