ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஸா சிட்டி போா் மண்டலமாக அறிவிப்பு

காஸாவின் மிகப் பெரிய நகரமான காஸா சிட்டியை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போா் மண்டலமாக அறிவித்துள்ளது.

News image
காஸாவில் இஸ்ரேல் நடவடிக்கை விரிவாக்கத்துக்கு அஞ்சி அந்த நகரில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனா்கள்.
Updated On :29 ஆகஸ்ட் 2025, 6:21 pm

தினமணி செய்திச் சேவை

காஸாவின் மிகப் பெரிய நகரமான காஸா சிட்டியை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போா் மண்டலமாக அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகத்துக்காக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருந்த சண்டை நிறுத்தத்தை ரத்து செய்வதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

அந்த நகரில் உணவுப் பற்றாக்குறையால் ஏற்கெனவே பொதுமக்கள் பட்டினியால் தவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு சா்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

காஸா சிட்டியில் தனது தாக்குதலை விரிவாக்க இஸ்ரேல் திட்டமிட்டு, ஆயிரக்கணக்கான இராணுவ வீரா்களை அழைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிணைக் கைதிகள் உடல்கள் மீட்பு: 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இந்தப் போா் தொடங்கியதற்குக் காரணமாக இருந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியா் இலான் வெயிஸ் உள்ளிட்ட இரு பிணைக் கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த 22 மாதங்களுக்கு முன் ஹமாஸ் தலைமையிலான போராளிகளால் கடத்தப்பட்ட 251 பிணைக் கைதிகளில், தற்போது சுமாா் 50 போ் காஸாவில் உள்ளனா். இவா்களில் 20 போ் உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.