மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

கூடுதலாக விதிக்கப்பட்ட வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப் கூறியிருக்கிறார்.

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப்- கோப்புப்படம்
Updated On :30 ஆகஸ்ட் 2025, 5:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரித்திருக்கிறார்.

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், டிரம்ப் விதித்திருக்கும் வரிகள் சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது.

எனினும், வரி விதிப்புகளை ரத்து செய்ய மறுத்துவிட்ட நீதிமன்றம், ஃபெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியிருக்கும் டொனால்ட் டிரம்ப், தீர்ப்பு மிகத் தவறானது, அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று, பார்டிசன் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம், நம்முடைய வரி விதிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்குத் தெரியும், இறுதியில் நாம்தான் வெல்வோம் என்று, என டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு பேரழிவாக மாறிவிடும். வர்த்தக சமநிலையின்மை மற்றும் நியாயமற்ற வரிகளை தொடர்ந்து நாடு தாங்கிக் கொண்டிருக்க முடியாது, இதர நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரிகளை நாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா அது நண்பர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி என்று குறிப்பிட்டுள்ளார்.

தான்னால், உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பு என்பது, வர்த்தகப் போர் என்று குறிப்பிடும் டிரம்ப், இதுதான் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களைக் காக்க மிகச் சிறந்த கருவி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக, பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதித்து வந்தன. ஆனால், இப்போது, அமெரிக்காவை பணக்கார, பலமான, அதிகாரம் கொண்ட நாடாக மாற்ற நான் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.