டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 10 லட்சம் டாலர் வழங்கிய சீனா!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி!
டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை
டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைAP
Updated on
1 min read

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா 10 லட்சம்(1 மில்லியன்) டாலர் நிதியுதவி அளித்துள்ளது. இலங்கையில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334-ஆகவும், மாயமானோரின் எண்ணிக்கை 370-ஆகவும் உயா்ந்தது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவை கொழும்பு நகரை ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) சென்றடைந்தன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது. இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை மீட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Summary

China donates USD one million aid to Sri Lanka for flood relief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com