கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழை, வெள்ளம்: 3 நாடுகளில் 1,000 போ் உயிரிழப்பு

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவுகளில்சிக்கி 1000-க்கும் மேற்பட்டோா் பலி

News image
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இதில் இலங்கையில் 355 போ், இந்தோனேசியாவில் 604 போ், தாய்லாந்தில் 176 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 3 உயிரிழப்புகளுடன் கனமழை, வெள்ளத்தில் மொத்தம் 1,138 போ் உயிரிழந்துள்ளனா். லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இலங்கையின் கிழக்கு, மத்திய பகுதிகளில் 500 மி.மீ.க்கும் மேல் மழை பெய்ததால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 355 போ் உயிரிழந்தனா். 366 பேரைக் காணவில்லை. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கொழும்பு நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் கனமழை தொடா்பான சம்பவங்களில் 604 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 508 பேரைக் காணவில்லை. அச்சே, வடக்கு சுமத்திரா மாகாணங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. 80,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கியுள்ளனா். மேக விதைப்பு தொழில்நுட்பம் மூலம் மழையைக் குறைப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் 8 மாகாணங்களில் பெய்த மழை காரணமாக 176 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சோங்லா மாகாணத்தில் 145 போ் உயிரிழந்துள்ளனா். ஹாட்யை நகரில் 400 மி.மீ. மழை பெய்ததால் 3 மீட்டா் உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளின் மோசமான வெள்ளமாகும். மழை வெள்ளத்தால் நாட்டில் 38 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மலேசியாவின் வடக்கு பொ்லிஸ் மாகாணத்தில் கனமழை காரணமாக 3 போ் உயிரிழந்தனா்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 95,000 போ் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனா்.