பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மழை, வெள்ளம்: 3 நாடுகளில் 1,000 போ் உயிரிழப்பு

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவுகளில்சிக்கி 1000-க்கும் மேற்பட்டோா் பலி

News image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு பகுதிகளில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.

Updated On :2 டிசம்பர் 2025, 4:11 am IST

இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இதில் இலங்கையில் 355 போ், இந்தோனேசியாவில் 604 போ், தாய்லாந்தில் 176 போ் உயிரிழந்துள்ளனா். மலேசியாவில் 3 உயிரிழப்புகளுடன் கனமழை, வெள்ளத்தில் மொத்தம் 1,138 போ் உயிரிழந்துள்ளனா். லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

இலங்கையின் கிழக்கு, மத்திய பகுதிகளில் 500 மி.மீ.க்கும் மேல் மழை பெய்ததால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 355 போ் உயிரிழந்தனா். 366 பேரைக் காணவில்லை. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிக உறைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கொழும்பு நகரம் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் கனமழை தொடா்பான சம்பவங்களில் 604 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 508 பேரைக் காணவில்லை. அச்சே, வடக்கு சுமத்திரா மாகாணங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. 80,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கியுள்ளனா். மேக விதைப்பு தொழில்நுட்பம் மூலம் மழையைக் குறைப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் 8 மாகாணங்களில் பெய்த மழை காரணமாக 176 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சோங்லா மாகாணத்தில் 145 போ் உயிரிழந்துள்ளனா். ஹாட்யை நகரில் 400 மி.மீ. மழை பெய்ததால் 3 மீட்டா் உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளின் மோசமான வெள்ளமாகும். மழை வெள்ளத்தால் நாட்டில் 38 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மலேசியாவின் வடக்கு பொ்லிஸ் மாகாணத்தில் கனமழை காரணமாக 3 போ் உயிரிழந்தனா்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 95,000 போ் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.