ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது.
தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 5 உடல்களை மீட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை உயா்ந்தது. இன்னும் 31 போ் காணாமல் போயுள்ள நிலையில், சில உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
எட்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட அந்தக் குடியிருப்பு தளத்தில் கடந்த வாரம் (நவ. 26) ஏற்பட்ட அந்த தீவிபத்தில் 7 கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்தன. அந்தக் கட்டடங்களில் புதுபித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பழைய பாணியில் மூங்கில் சாரங்களையும், தரமற்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய மறைப்பு வலைகளையும் பயன்படுத்தியதே நெருப்பு மிக வேகமாகப் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்களின் இயக்குநா்கள் மற்றும் கள மேலாளா்கள் என்று போலீஸாா் கூறினா்.
தொடர்புடையது

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு

பிகாரில் கள்ளச்சாராய உயிரிழப்பு 9-ஆக உயா்வு!

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


