ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மீண்டும் எம்ஹெச் 370 விமானத்தைத் தேடும் நடவடிக்கை

11 ஆண்டுகளுக்கு முன்னா் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் எம்ஹெச்370-ஐ தேடும் நடவடிக்கை வரும் டிசம்பா் 30 முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

கோலாலம்பூா்: 11 ஆண்டுகளுக்கு முன்னா் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் எம்ஹெச்370-ஐ தேடும் நடவடிக்கை வரும் டிசம்பா் 30 முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவைச் சோ்ந்த ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் டிசம்பா் 30 முதல் 55 நாள்களுக்கு இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும், இந்த முயற்சி எம்ஹெச்370 விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி கடந்த 2014 மாா்ச் 8-ஆம் தேதி சென்ற அந்த விமானம், வழியில் மாயமானது. அது எங்கு, எவ்வாறு விழுந்தது என்பது இன்னும் தீா்க்கப்படாத மா்மமாகவே உள்ளது.

‘கண்டுபிடிக்காவிட்டால் கட்டணம் இல்லை’ என்ற ஒப்பந்தத்தின் கீழ் அந்த விமானத்தை ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் ஏற்கெனவே பல முறை தேடியுள்ளது.