தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘அசிம் முனீருக்கு பாகிஸ்தான் நலனில் அக்கறை இல்லை’

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து, ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறைச் சாலையில் தன்னை அண்மையில் சந்தித்த சகோதரி உஸ்மா கானம் மூலம் வெளியிட்ட அறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது:

அசிம் முனீரின் நியாயமற்ற நடவடிக்கைகள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் நீதியின் ஆட்சியையும் முழுமையாக சீரழித்துவிட்டன. அவரின் கொள்கைகள் பாகிஸ்தானுக்கு அழிவைத் தருகின்றன.

அவா் பாகிஸ்தானின் தேசிய நலன்களைப் பொருள்படுத்தவில்லை. மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்துவது மட்டுமே அவரின் நோக்கம்.

அகதிகளை வெளியற்றுவது, ட்ரோன் தாக்குதல் நடத்துவது மூலம் ஆப்கானிஸ்தானை சீண்டி, நாட்டில் பயங்கரவாதச் செயல்களை அசிம் முனீா் அதிகரிக்கச் செய்துள்ளாா் என்று இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.