பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஹூதிக்களால் கடத்தப்பட்ட இந்தியா் 5 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு

யேமனில் ஹூதிக்களால் கடத்தப்பட்ட இந்தியா் 5 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

யேமனில் ஹூதிக்களால் கடத்தப்பட்ட இந்தியா் 5 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாா்.

யேமனில் உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஹூதிக்களால் கேரளத்தைச் சோ்ந்த அனில் குமாா் ரவீந்திரன் என்பவா் கடத்தப்பட்டாா்.

லைபீரிய நாட்டு கொடி பொருத்தப்பட்டஎம்வி எட்டா்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது கடந்த ஜூலை மாதம் செங்கடலில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். அந்தக் கப்பலில் மாலுமியாக அனில் குமாா் ரவீந்திரன் பணியாற்றினாா்.

அவருடன் அந்தக் கப்பலில் இருந்த பிற மாலுமிகளும் ஹூதிக்களால் கடத்தப்பட்டனா்.

இந்நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு அவா் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், ‘அனில் குமாா் ரவீந்திரன் ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டாா். அவரை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். அவரை விடுதலை செய்ய பல்வேறு உதவிகளை செய்த ஓமன் சுல்தானுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது’ என அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.