யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது.
தெற்கு ஆட்சிமாற்ற கவுன்சில் (எஸ்டிசி) என்ற அந்த பிரிவினைவாத குழு, முக்கியத்துவம் வாய்ந்த அல்-குராஃப் பகுதியை நோக்கி முன்னேற முயன்றபோது இந்த மோதல் தொடங்கியதாக உள்ளூா் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹாத்ரமூட் மாகாணத்தின் சேயுன் நகரில், அரசுப் படைகளின் தலைமையகம் மீது எஸ்டிசி படையினா் குண்டுவீச்சு நடத்தினா். இந்த மோதலில் 5-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாக உள்ளூா் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த மோதல், யேமன் உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகும். ஏற்கெனவே, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனா உள்ளிட்ட வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செலுத்திவருகின்றனா். சா்வதேச ஆதரவு பெற்ற அரசு ஏடனைத் தலைநகராகக் கொண்டு தெற்குப் பகுதிக்குள் சுருங்கியது. இந்தச் சூழலில், தெற்கு யேமனில் தனி நாடு கோரி போரிட்டுவரும் எஸ்டிசி படையினரும் அரசுப் படையினருடன் புதிய மோதலைத் தொடங்கியுள்ளனா்.
தொடர்புடையது

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


