சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வங்கதேசம்: இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் ராஜிநாமா!

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் உயர் பதவியிலிருந்து இருவர் விலகல்!

News image
- படம் | ஏஎன்ஐ
Updated On :10 டிசம்பர் 2025, 3:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் உயர் பதவியிலிருந்து இருவர் விலகியுள்ளனர். வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்தில் அரசு நிர்வாகத்தை வழிநடத்தும் இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இடைக்கால அரசில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கான ஆலோசகர் எம். மஹ்ஃபுஜ் ஆலம், ஊரக வளர்ச்சி மற்றும் கூட்டுறவு, உள்ளாட்சி, இளையோர் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான ஆலோசகர் ஆசிஃப் மஹ்மூத் ஷோஜிப் புயைன் ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜிநாமாவை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரும் தலைவருமான முஹம்மது யூனுஸ் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

2 advisers of Bangladesh's interim government resign ahead of poll schedule announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.