ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ தலைமறைவு: விருதைப் பெற்ற மகள்! - என்ன நடந்தது?

மச்சாடோ தலைமறைவாகியிருக்கும் சூழலில், அவர் சார்பாக நோபல் பரிசை அவரது மகள் பெற்றுக்கொண்டார்.

News image
நோபல் பரிசை பெற்றுக்கொண்ட மச்சாடோ மகள் - படம் | எக்ஸ் பதிவிலிருந்து | @NobelPrize
Updated On :10 டிசம்பர் 2025, 2:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மச்சாடோ தலைமறைவாகியிருக்கும் சூழலில், அவர் சார்பாக அவரது மகள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் விதிமீறல்கள், மனித உரிமைகள் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், 2024-இல் வெனிசுலா அதிபா் தோ்தலில் முறைகேடுகள் நடக்கவில்லை என அந்த நாட்டு தோ்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது.

இந்த நிலையில், வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ அந்நாட்டில் ஜனநாயகம் தலைதூக்க தலைநகர் கரகஸில் தமது ஆதரவாளர்களுடன் இணைந்து போராடிய நிலையில் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரிமுதல் பொதுவெளியில் தென்படாமல் மாயமாகி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் மச்சாடோ.

இதனிடையே, வெனிசுலாவின் எதிா்க்கட்சித் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு நிகழாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது வாங்கும் விழாவானது நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்றது. மச்சாடோ தலைமறைவாகியிருக்கும் சூழலில், அவர் சார்பாக அவரது மகள் விருதைப் பெற்றுக்கொண்டார்.

இது குறித்து, நார்வேயின் நோபல் நிறுவனத்தின் இயக்குநரும் மச்சாடோவின் செய்தித்தொடர்பாளருமான ஜார்கென் குறிப்பிடுகையில், நோபல் பரிசளிப்பு விழாவில் மச்சாடோவால் கலந்துகொள்ள முடியவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆபத்தான சூழலில் உள்ள மச்சாடோ இவ்விழாவில் கலந்துகொள்ள தன் சக்திக்கு இயன்றவரையில் எல்லா விதத்திலும் முயன்ற போதிலும், இறுதியில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. இருப்பினும், மச்சாடோ பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திருக்கிறோம். இதனையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது மகள் ஆனா கொரினா சோசா விருதைப் பெற்றுக்கொண்டார் என்றார்.

summary

Machado has been in hiding: Venezuelan opposition leader Maria Corina Machado's daughter accepted the Nobel Peace Prize on her mother's behalf Wednesday, hours after officials said Machado would miss the ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.