கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உக்ரைனில் 3 மாதங்களுக்குள் தேர்தல்? - ஸெலென்ஸ்கி சூசகம்!

அமெரிக்காவும் ஐரோப்பிய கூட்டாளிகளும் பாதுகாப்பு வழங்க உக்ரைன் வலியுறுத்தல்...

News image
பாதிப்புக்குள்ளான உக்ரைனில் மக்கள்- AP
Updated On :10 டிசம்பர் 2025, 1:12 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உக்ரைனில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவின் தாக்குதல்கள் உக்ரைனில் தொடரும் நிலையில், அமெரிக்காவும் உக்ரைனுக்கு நெருக்கமான ஐரோப்பிய கூட்டாளிகளும் தேர்தலின்போது பாதுகாப்பு வழங்க அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைனில் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் போரை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்து வருவதாக ஸெலென்ஸ்கி மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 9) இரவு செய்தியாளர்களுடன் பேசிய அவர், “உக்ரைனில் தேர்தல் நடைபெற 2 முக்கிய சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

முதன்மையாக, பாதுகாப்பு. ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக தேர்தலை நடத்துவது எப்படி? ராணுவ வீரர்கள் எப்படி வாக்கு செலுத்தப் போகின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு விடை வேண்டும். இரண்டாவதாக, தேர்தல் நடைமுறைப் பற்றிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மாற்றங்கள்” என்றார். இவற்றுக்கு தீர்வு எட்டப்பட்டால் அடுத்த 60 முதல் 90 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

summary

President Volodymyr Zelenskyy said Ukraine would be ready for elections within three months if partners can guarantee a safe vote during wartime and if its electoral law can be altered.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.