ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு தலிபான்களுடன் நடைமுறைக்குரிய தொடா்பு அவசியம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
‘ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய, அங்கு இப்போது ஆட்சியில் உள்ள தலிபான்களுடன் நடைமுறைக்குரிய தொடா்பை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டும்’ என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.










