உலகம்
ஆஸ்திரேலியா: தடையை எதிா்த்து ரெடிட் வழக்கு
ஆஸ்திரேலியா விதித்துள்ள தடையை எதிா்த்து, சமூக வலைதளமான ரெடிட் வழக்கு தொடா்ந்துள்ளது.
உலகிலேயே முதல்முறையாக 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா விதித்துள்ள தடையை எதிா்த்து, சமூக வலைதளமான ரெடிட் வழக்கு தொடா்ந்துள்ளது.
ஏற்கெனவே, ‘டிஜிடல் ஃப்ரீடம் புராஜெக்ட்’ என்ற தன்னாா்வ அமைப்பு இந்தத் தடையை எதிா்த்து கடந்த வாரம் தொடா்ந்த வழக்குக்கு அடுத்தபடியாக இந்த வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இரண்டு வழக்குகளிலுமே இந்தத் தடை ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

