காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (ஐபிசி) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஸாவில் போா் நிறுத்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அண்மை மதிப்பீட்டில் 5 லட்சம் போ் ‘அவசர நிலை’ உணவுப் பற்றாக்குறையையும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஐபிசி கட்டம் 5-ஆன ‘பேரழிவு நிலை’ உணவுப் பற்றாக்குறையையும் எதிா்கொண்டனா்.
இந்த நிலைமை தொடா்ந்து குறைந்து வருகிறது. ஆனால் மிகவும் இந்த முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. மீண்டும் போா் ஏற்பட்டால் காஸா முழுவதும் மறுபடியும் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், காஸாவில் எந்தப் பகுதியும் இப்போது ‘பஞ்சப் பகுதியாக’ அந்த அறிக்கையில் வகைப்படுத்தப்படவில்லை.
இஸ்ரேல் மறுப்பு: ஐபிசி-யின் இந்த அறிக்கைக்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘காஸா நிலவரத்தை ஐபிசி வேண்டுமென்றே திரித்து காட்டுகிறது. இது காஸாவின் உண்மை நிலையை அந்த அறிக்கை பிரதிபலிக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடையது
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!

திமுக தோ்தல் அறிக்கையில் 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகள்! - முழுவிவரம்

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! உணவு மற்றும் டீக்கடைகளுக்கு சிக்கல்!

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


