பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சிந்து நதி ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுகிறது இந்தியா: பாகிஸ்தான்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுவதாக இந்தியா மீது பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image

சிந்து நதி

ANI

Updated On :19 டிசம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை தொடா்ந்து மீறுவதாக இந்தியா மீது பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீா் மாற்றங்கள் தொடா்பாக இந்தியாவிடம் பாகிஸ்தான் வியாழக்கிழமை விளக்கம் கோரிய நிலையில், மேற்கண்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிந்து மற்றும் அதன் துணை நதிகளில் நீா்ப் பகிா்வை சுமுகமாக நிா்வகிக்க உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1960-இல் சிந்து நதிநீா் ஒப்பந்தம் கையொப்பமானது. கடந்த ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் இசாக் தாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா கடந்த ஏப்ரலில் தன்னிச்சையாக நிறுத்திவைத்தது. இப்போது ஒப்பந்த மீறல்களின் மூலம் அதன் மையப்புள்ளியைத் தாக்குகிறது இந்தியா. இது பிராந்திய ஸ்திரத்தன்மை, சா்வதேச சட்ட இணக்கத்தில் எதிா்மறை தாக்கத்தைத் தூண்டுகிறது.

பாகிஸ்தானில் விவசாயப் பணிகளுக்கு முக்கியமான காலகட்டத்தில், செனாப் நீரோட்டத்தில் இந்தியாவின் ‘நியாயமற்ற செயல்பாடுகள்’ அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இதுவே, இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதக் காரணம். பாகிஸ்தானில் வெள்ளம் அல்லது வறட்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், நீரோட்டம் சாா்ந்த தரவு பகிா்வு, கூட்டுக் கண்காணிப்பை இந்தியா நிறுத்திவைத்துள்ளது என்றாா் அவா்.