25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு!

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பி-52 குண்டுவீச்சு விமானம் (கோப்புப் படம்).

Published On :21 டிசம்பர் 2025, 3:37 am IST

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்கா தீவிர குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிரியாவின் மத்திய பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் தலைமை இடங்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்‘ என்ற பெயரில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பி-52 குண்டுவீச்சு விமானங்கள், எஃப்-15, எஃப்-16 போா் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன. துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதன் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவா்கள் பலா் கொல்லப்பட்டனா். பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல் சிரியாவின் புதிய அரசுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் நீண்ட காலம் ஆட்சி செலுத்தி வந்த அல்-அஸாதின் ஆட்சி கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி வீழ்த்தப்பட்டதற்குப் பிறகு, ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சிரியாவின் மத்திய பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களை அமைத்து, தாக்குதல்களைத் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன.

இதைத் தடுக்கவே இந்தத் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல், ஜோா்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிரியாவின் புதிய தற்காலிக அரசு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்கத் தயாா் என்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல், சிரியாவில் அஸாத் ஆட்சி வீழ்ந்த பிறகு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.