/

பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: கிரெட்டா தன்பர்க் மீது பாய்ந்த பயங்கரவாதச் சட்டம்! லண்டனில் கைது!

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட கிரெட்டா தன்பர்க் பயங்கரவாதச் செயல் சட்டத்தின்கீழ் கைது!

News image

கிரெட்டா தன்பர்க் - படம் | ஏஎன்ஐ

Updated On :23 டிசம்பர் 2025, 7:12 pm IST

சுவீடன் நாட்டைச் சேர்ந்த உலகம் நன்கறிந்த இளம் வயது சமூக செயல்பாட்டாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கிரெட்டா தன்பர்க் லண்டனில் கைது செய்யப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை(டிச. 23) தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பாலஸ்தீன ஆதரவுச் செயல்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை லண்டன் மாநகர் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து போராட்டக் களத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.

தடை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன செயல்பாட்டுக் குழுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரும் பயங்கரவாதச் செயல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பாலஸ்தீன ஆதரவு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Greta Thunberg arrested under the Terrorism Act at the Prisoners for Palestine lock-on protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.