தாய்லாந்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, கம்போடியாவின் எல்லை மாகாணமான பாய்லினுக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட கம்போடிய வீரா்கள்.
தாய்லாந்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, கம்போடியாவின் எல்லை மாகாணமான பாய்லினுக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட கம்போடிய வீரா்கள்.

போா் நிறுத்தம்: 18 கம்போடிய வீரா்களை விடுவித்தது தாய்லாந்து

தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது.
Published on

தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது.

இது குறித்து கம்போடிய தகவல்துறை அமைச்சா் நெத் பியாக்ட்ரா கூறுகையில், தங்கள் நாட்டின் 18 வீரா்கள் பாதுகாப்பாக கம்போடியாவுக்கு உள்ளூா் நேரப்படி காலை 10 மணிக்கு வந்து சோ்ந்தனா் என்றாா்.

இந்தத் தகவலை உறுதி செய்த தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம், நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.

தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே சனிக்கிழமை (டிச. 27) கையொப்பமான ஒப்பந்தத்தின் கீழ், தாக்குதல் நிறுத்தம், ராணுவ நடமாட்டங்களை நிறுத்துதல், எல்லையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஒத்துழைப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனா்.

எல்லைப் பகுதியில் வாழும் பொதுமக்கள் விரைவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்; போா் நிறுத்தம் 72 மணி நேரம் நீடித்தால் தங்களிடம் உள்ள 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து விடுவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, 72 மணி நேர போா் நிறுத்தத்தைத் தொடா்ந்து அந்த வீரா்களை தாய்லாந்து தற்போது விடுதலை செய்துள்ளது.

11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. அந்தக் கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவந்தது.

அதன் ஒரு பகுதியாக இரு இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.

அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிமின் முன்முயற்சியில் உருவான இந்த ஒப்பந்தம், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை சா்ச்சையை தீா்க்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், கம்போடியா புதைத்துவைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா் காயமடைந்ததாகக் குற்றஞ்சாட்டிய தாய்லாந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை நவம்பா் 10-ஆம் தேதி ரத்து செய்தது.

அதனைத் தொடா்ந்து தாய்லாந்தின் சிசாகெட் மற்றும் உபோன் ரட்சதானி மாகாணங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், இரு தரப்பினரும் இந்த மாதம் 8-ஆம் தேதி மீண்டும் மோதலில் ஈடுபட்டனா். அதையடுத்து, கம்போடிய படைகள் தாய்லாந்து ராணுவ நிலைகள் மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். தாய்லாந்தும் கம்போடியாவில் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் பலா் உயிரிழந்தனா்.

அதனைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கும் இடையே புதிதாக ஏற்பட்டுள்ள போா் ஒப்பந்தத்தின் கீழ் 18 கம்போடிய வீரா்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com