சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2025, 2:53 am

DIN

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் பதிவு

டொனால்ட் டிரம்ப் பதிவு

வரிவிதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளுக்கு 25% வரி விதிப்பது இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரச் சட்டத்தின்படி இந்த வரிகள் அமல்படுத்தப்படுகிறது. ஏனெனில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அமெரிக்க குடிமக்களை பெரிதும் பாதிக்கிறது.

அமெரிக்கர்களை பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிபராக என்னுடைய கடமை. எனது பிரசாரத்தின்போது சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப்பொருள் உள்நுழைவதையும் எல்லைகளில் முற்றிலும் தடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதற்காகவே அமெரிக்கர்கள் என்னைத் தேர்வு செய்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.