கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்ட்.! ஜாக்பாட் யாருக்கு?

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்டை அறிமுகப்படுத்தியுள்ளார் டிரம்ப்..

News image

அதிபர் டொனால்ட் டிரம்ப்..

Updated On :26 பிப்ரவரி 2025, 3:00 am

DIN

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய தங்க அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இது புதிதாக குடிபெயர்வர்களுக்கு 5 மில்லியன்(சுமார் ரூ.43 கோடி) டாலர்களுக்கு விற்கப்படும் என்றும், இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது “குடியுரிமைக்கான பாதை” என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், “நாங்கள் ஒரு கோல்டு கார்டை விற்பனை செய்யப் போகிறோம்.நாங்கள் அந்த கோல்டு கார்டுக்கு சுமார் 5 மில்லியன் டாலர் விலையை நிர்ணயிப்போம். அது உங்களுக்கு கிரீன் கார்டைவிட அதிக சலுகைகளை வழங்கும்.

இது குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும். இந்த அட்டையை வாங்குவதன் மூலம் பணக்காரர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் நிறைய பணம் செலவழித்து, நிறைய வரிகளைச் செலுத்தி, நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள்” என்றார்.

இபி-5 விசாவுக்கு மாற்று ஏற்பாடா?

மேலும் இதுபற்றி லுட்னிக் கூறும்போது, “இது இபி-5 விசாவுக்கு மாற்று ஏற்பாடாக கூட இருக்கலாம். கிரீன் கார்ட்க்கு செலவளிக்கும் தொகை நேரடியாக அரசுக்குச் செல்லும். அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் குடியேறுபவர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்கும்” என்றார்.

இந்தத் திட்டம் இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டிரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாடு கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டது இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.