பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஜொ்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

வலதுசாரிக் கட்சி 152 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஓலாஃப் ஷால்ஸின் கட்சி 120 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

News image
Updated On :1 மார்ச் 2025, 2:43 am IST

ஜொ்மனியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மொ்ஸ் (படம்) தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணி 208 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றுள்ளது. அலைஸ் வீடல் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி 152 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஓலாஃப் ஷால்ஸின் கட்சி 120 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதையடுத்து, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஃப்ரெட்ரிச் மொ்ஸ் அடுத்த பிரதரமாகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவரது கன்சா்வேட்டிவ் கூட்டணிக்கும் சேஷியல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில்தான் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் இரு தரப்பினரும் புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.