ஜொ்மனியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மொ்ஸ் (படம்) தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணி 208 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றுள்ளது. அலைஸ் வீடல் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி 152 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஓலாஃப் ஷால்ஸின் கட்சி 120 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
அதையடுத்து, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஃப்ரெட்ரிச் மொ்ஸ் அடுத்த பிரதரமாகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவரது கன்சா்வேட்டிவ் கூட்டணிக்கும் சேஷியல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில்தான் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் இரு தரப்பினரும் புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ தேர்வில் புதுக்கோட்டை மாணவி ஸ்ரீனிகா மாநில அளவில் 2-வது இடம்!

எதிர்காலக் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும்: மதிமுக

2 அதிருப்தி எம்.பி.க்களுடன் பேச்சு: உத்தவ் கட்சி தகவல்

சிவசேனை உத்தவ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்! 9-ல் 6 பேர் புறக்கணிப்பு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



