குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

News image

முன்னாள் அதிபர் யூன் சுக் இயோ

Updated On :16 ஜனவரி 2025, 3:06 am IST

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் தீவிரமாக தடுத்துவந்த சூழலில், அவரது இல்லத்தின் சுவரேறிக் குதித்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவின் அதிபராக இருந்து வந்த யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடர்ந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவருவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றார். இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். அதையடுத்து அவர் தற்காலிகமாக பதவி விலகினார்.

அவரை நிரந்தரமாக நீக்குவது தொடர்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.

இந்த நிலையில், அவசர நிலை அறிவிப்பு தொடர்பாக யூன் சுக் இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

அதையடுத்து, அவரைக் கைது செய்ய முயன்ற புலன்விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீஸôரை பாதுகாப்புப் படையினர் கடந்த 3-ஆம் தேதி தடுத்து நிறுத்தியதால் அவர்கள் திரும்பச் சென்றனர்.

இந்தச் சூழலில், யூன் சுக் இயோல் இல்லத்துக்கு புதன்கிழமை வந்த அதிகாரிகள், வீட்டுச் சுவர் ஏறி, இரும்பு முள் வேலியை துண்டித்துத் திறந்து அவரைக் கைது செய்தனர்.

பின்னர் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தப்பட்ட அவர், அவர்களின் விசாரணை முடிந்ததும் சிறைக்காவலில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கொரிய வரலாற்றில் அதிபர் பதவியிலிருந்து முழுமையாக அகற்றப்படாத ஒருவர் கைதாகியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யூன் சுக் இயோலைக் கைது செய்ய அவரது இல்லத்தின் தடுப்பு வேலியைத் துண்டிக்கும் புலன்விசாரணை அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.