குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

லாஸ் ஏஞ்சலீஸ் தீயில் வீட்டை இழந்த பிரபல தம்பதியர்!

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியினர் தங்களது வீட்டை இழந்துள்ளனர்.

News image

ரியாலிட்டி டிவி தம்பதி!

Updated On :24 ஜனவரி 2025, 7:17 pm IST

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியினர் தங்களது வீட்டை இழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 48,250 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன. அதையடுத்து பல்வேறு பகுதிகளில் மருத்துவ அவசரநிலை அறிவிப்பட்டது.

சற்று தணிந்திருந்த இந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 48 கி.மீ. பரப்பிலான பகுதிகளில் காட்டுத் தீயின் தீவிரம் அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியான ஹெய்டி மாண்டாக் மற்றும் ஸ்பென்சர் பிராட் ஆகியோர் பசிபிக் பாலிசீட்ஸில் உள்ள தங்களது வீட்டை இழந்துள்ளனர். இத்தம்பதினர் மட்டுமின்றி மேலும் 20க்கும் மேற்பட்டோரும் பாலிசீட்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சொத்துகளை இழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரியாலிட்டி டிவி தம்பதி உள்பட பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் வழக்கு தொடுத்துள்ளனர். அதில், லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதன் நகராட்சி நீர்த் துறையை குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தண்ணீர் பிரச்னை காரணமாக தங்களது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.