கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

ஈரானிலிருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்: இருநாட்டு எல்லையில் கடும் கூட்டம்!

News image

ஆப்கன் அகதிகள்

படம்| தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்/ஏஎஃப்பி

Updated On :6 ஜூலை 2025, 1:54 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர்.

ஈரானிலிருந்து வரும் மக்களை ஆப்கானிஸ்தானுக்குள் அனுமதிக்க தேவையான நடைமுறைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் இருநாட்டுக்கிடையிலான ‘இஸ்லாம் ஃகாலா’ எல்லையில் கடும் கூட்டம் காணப்படுகிறது.

இதனால் ஆப்கன் எல்லையில் ‘அவசரநிலை’ ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கன் அகதிகள் ஈரானிலிருந்து வெளியேறி வருகின்றனர். சுமார் 60 லட்சம் ஆப்கன் மக்கள் ஈரானில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், புதிய உத்தரவால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.

ஜூன் மாதம் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் ஈரானிலிருந்து திரும்பியிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதால் அங்கு அவசரநிலை நிலவுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. இந்த ஓராண்டில் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து 14 லட்சம் ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 25 சதவீதத்தினர் குழந்தைகள்.

ஈரானில் இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரிகளின் கடும் அழுத்தத்தாலும் கைது நடவடிக்கைகளுக்கு பயந்தும் வேறு வழியின்றி தாயகம் திரும்புவதாக ஆப்கன் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஈரானிலிருந்து எல்லை சென்றடைந்த ஒரு அகதி பேசியதாவது: “ஈரானில் கடும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைவிட எமது சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைக்க தயாராக இருக்கிறோம்” என்கிறார்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, வெளிநாடுகளின் அகதிகள் வெளியேற்ற நடவடிக்கை பெரும் சுமையாக அமைந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, ஆப்கன் அகதிகளை வெளியேற்றுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பல நாடுகளையும் ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.

Summary

Afghan refugees arrive from Iran at Islam Qala border between Afghanistan and Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.