நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்

டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் கடிதம்

News image

AP

Updated On :8 ஜூலை 2025, 8:42 pm IST

டொனால்ட் டிரம்ப்பின் பெயர் நோபல் பரிசுக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திங்கள்கிழமை(ஜூலை 7) டிரம்ப்பிடம் பேசியபோது, டிரம்ப்பின் பெயரை இந்த உயரிய கௌரவத்துக்கு பரிந்துரைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், இது தொடர்பாக நோபல் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தையும் டிரம்ப்பிடம் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார்.இந்தப் போரை நிறுத்தியதற்கு பாகிஸ்தான் அரசு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானும் தெரிவித்திருந்தது. இப்போது இஸ்ரேலும் அதனையே வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், இனி வரும் நாள்களில், இஸ்ரேலுடனான தமது நெருங்கிய உறவை பயன்படுத்தி காஸா போரையும் டிரம்ப் முடிவுக்கு கொண்டுவரப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Summary

US President Donald Trump has been nominated again for the Nobel Peace Prize - Israel's Prime Minister Benjamin Netanyahu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.