அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் கட்டடங்கள் சரிந்து விழுந்ததைப் பற்றி...

News image

செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்களைப் பார்த்த நெதன்யாகு.

Updated On :19 ஜூன் 2025, 8:22 pm IST

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நிலவிவருகிறது. இரு நாடுகளும் கடுமையாக தாக்கிக் கொண்டு 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், பலர் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு இஸ்ரேலில் இன்று(ஜூன் 19) காலை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதில் 1000 படுக்கைகள் கொண்ட சோரோக்கா மருத்துவமனை கடுமையான தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என பலர் தலைதெறிக்க ஓடிய விடியோக்களும் இணைத்தில் வைரலாகின.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரும் பீர்ஷெபா நகரத்தின் மேயருடன் ரூபிக் டானிலோவிச்சுடன் சென்று அங்கு மருத்துவமனையின் நிலைமையை கவனித்தார்.

அங்கு சென்ற நெதன்யாகு செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் ஈரானிய ஏவுகணைகளைத் துல்லியமாகத் தாக்குகிறோம். ஆனால், அவர்கள் மருத்துவமனையைத் தாக்குகிறார்கள். அங்கு மக்கள் எழுந்து ஓடக்கூட முடியாத நிலையில் உள்ளனர்” என்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலைநகர் டெல் அவிவ்வில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகள் சரிந்து விழுந்தன.

இந்த விடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. கட்டடங்கள் சரிந்து விழுந்தாலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செய்தியாளர்களின் உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.