சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்தார். அப்போது மாகாண எல்லைப் பகுதிகளில் அமைதியையும், நிலைத்தன்மையையும் காப்பதற்குத் தேவையான உறுதிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சீன துணை அதிபர் ஹான் ஜெங்கையும் அஜித் தோவல் இன்று சந்தித்தார். இது குறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
ஜூன் 24ஆம் தேதி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சீன துணை அதிபர் ஹான் ஜெங் அழைப்பு விடுத்தார். மற்ற தூதுக்குழு தலைவர்களும் இதில் பங்கேற்றனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
சீன துணை அதிபர் உடனான சந்திப்பின்போது, இந்தியா - சீனா இடையிலான சமீபத்திய நிகழ்வுகள் குறித்துப் பேசப்பட்டது. இரு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ஈரான் நல்ல முடிவை எடுக்கவேண்டும்: ஜேடி வான்ஸ்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

ஈரான் உடன் அமைதிப்பேச்சு! பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!

ஈரானுடன் அமைதிப்பேச்சு! பாக். புறப்பட்டார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


