பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதியதில் 37 பேர் பலி

பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 37 பேர் பலியானார்கள்.
(Photo | AFP)
AFP
(Photo | AFP) AFP
Published on
Updated on
1 min read

பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 37 பேர் பலியானார்கள்.

தெற்கு பொலிவியாவின் போடோசி பகுதியில் சனிக்கிழமை இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 37 பேர் பலியானார்கள். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்துகளில் ஒன்று எதிர் பாதையில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடவுச்சீட்டுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்! மத்திய அரசு

இருப்பினும் விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர் ஒருவர் விபத்துக்கு முன்னர் மது அருந்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அவர் மது அருந்துவதை பயணிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com