வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்க நிறுவனங்கள்!

விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து?

News image
Updated On :10 மார்ச் 2025, 5:55 pm IST

வாஷிங்டன் : டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அந்த செயலிக்குத் தடை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

டிக்-டாக்கை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்!

இந்த நிலையில், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இதற்காக டிக் டாக்குக்கு 75 நாள்கள் கால அவகாசமும் அளித்திருந்தார். இதையடுத்து, ஆரக்கிள், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் டிக் டாக் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, டிக் டாக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், பல நிறுவனங்களும் டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவை தான் ஆலோசித்து எடுக்கப்போவதாகவும், சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகக் கூறினார்.

வாஷிங்டன் : டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அந்த செயலிக்குத் தடை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

டிக்-டாக்கை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்!

இந்த நிலையில், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இதற்காக டிக் டாக்குக்கு 75 நாள்கள் கால அவகாசமும் அளித்திருந்தார். இதையடுத்து, ஆரக்கிள், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் டிக் டாக் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, டிக் டாக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், பல நிறுவனங்களும் டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவை தான் ஆலோசித்து எடுக்கப்போவதாகவும், சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.