தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2025, 11:54 pm

Din

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.

இதில் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் எதிா்கால பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் எஸ்சிஓ உறுப்பினா்களாக உள்ளன. இந்த அமைப்பு பயங்கரவாத பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு கட்டமைப்பைக் கொண்டது.

நிகழாண்டு எஸ்சிஓ தலைவா்கள் மாநாட்டுக்கு சீனா தலைமை தாங்கியுள்ளது. இதையடுத்து அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்கள் தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை சீனா நடத்தி வருகிறது.

அந்த வகையில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜாங் ஜியாகாங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.