இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.
இந்த ராணுவ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், ராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யாமலேயே மேலும் பல அரசுப் பொறுப்புகளை வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அதிபரும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான பிரபாவோ சுபியாந்தோவுக்கு ஆதரவான கட்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன.
இருந்தாலும், இந்தோனேசியாவின் மிகப் பலவீனமான ஜனநாயகத்துக்கு இந்த சட்டத் திருத்தம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஜனநாயக ஆதரவாளா்களும் மனித உரிமை ஆா்வலா்களும் அச்சம் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிர் இடஒதுக்கீடு மசோதவை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் வேண்டுகோள்!

மக்களவையில் சுரங்க மசோதா விவாதமின்றி நிறைவேற்றம் - கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிக்க கட்டுப்பாடு

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது எஃப்சிஆா்ஏ மசோதா- இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றம்
‘வங்கி புத்தகங்கள்’ புதிய மசோதா: தமிழக எம்.பி.க்கள் நிலை என்ன?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



