பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!

ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள்

ஜிப்லி அனிமேஷன் சித்திரித்த பிரதமர் நரேந்திர மோடியின் படம் - X | BJP

Published On :30 மார்ச் 2025, 6:27 pm IST

ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல் நுண்ணறிவு தளமான சாட் ஜிபிடியின் மூலம் ஜிப்லி என்ற அனிமேஷன் படங்களை உருவாக்குவது, சமீபத்தில் உலகளவில் டிரெண்டாகி உள்ளது. இந்த நிலையில், அனிமேஷன் படங்களைச் சித்திரிப்பதற்காக, சாட் ஜிபிடியை அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்துவதை கொஞ்சம் நிறுத்துமாறு ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ஜிப்லி படங்கள் உருவாக்குவதை கொஞ்சம் நிறுத்துங்கள். எங்கள் குழுவினருக்கும் கொஞ்சம் உறக்கம் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

சாட் ஜிபிடியில் செயல் நுண்ணறிவால் நொடிப் பொழுதில் அனிமேஷன் படங்களை உருவாக்கித் தருவதால், இதனை பலரும் தற்போது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். செல்ஃபி முதல் செல்லப்பிராணிகள் வரையில் ஜிப்லி அனிமேஷனுக்கு உள்படுத்தப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை, முதலில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் அனுமதித்த நிலையில், தற்போது அனைவருக்கும் இலவசமாக சாட் ஜிபிடி வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஜிப்லி அனிமேஷன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், ஞாயிற்றுக்கிழமை மதியத்திலிருந்து சாட் ஜிபிடி தளத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு முடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.