ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா என்ற எக்ஸ் தளப் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மனிதர்கள் 100 பேர் சேர்ந்து, ஒரு கொரில்லாவை வெல்ல முடியுமா என்று உலகப் புகழ்பெற்ற யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் கேள்வி எழுப்பினார். பீஸ்ட்டின் இந்தக் கேள்வி, சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அதிகளவில் நகைச்சுவை விமர்சனங்களே பெருகி வருகின்றன.
100 மனிதர்கள் சேர்ந்து, முழுமையான வளர்ச்சியடைந்த ஒரு கொரில்லாவை வீழ்த்த முடியுமா? யாரேனும் போட்டிக்குத் தயாரா? என்று மிஸ்டர் பீஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
மிஸ்டர் பீஸ்ட்டின் இந்தப் பதிவுக்கு, தான் தயாராக இருப்பதாக மற்றொரு பிரபல யூடியூபரான ஐ ஷோ ஸ்பீடு (IshowSpeed) என்பவர் பதிலளித்தார்.
தொடர்ந்து, டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், `இதன் முடிவு எந்தளவுக்கு இருக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
Need 100 men to test this, any volunteers? pic.twitter.com/p2iQvOWbYJ
— MrBeast (@MrBeast) April 28, 2025
அதுமட்டுமின்றி, இந்தப் பதிவுக்கு விலங்கு வதைத் தடுப்பு அமைப்பு தெரிவித்த பதிலில், `உங்கள் தொழிலில் விலங்குகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க 100 யோசனைகளை மேற்கொள்ளலாம்’ என்று கூறியது.
தொடர்ந்து, மிஸ்டர் பீஸ்ட்டின் எக்ஸ் பதிவுக்கு, பல தரப்பிலிருந்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஒருமித்த கருத்துகளாக, கொரில்லாவை 100 மனிதர்களால் தோற்கடிக்க முடியாது என்றுதான் பதில் பெறப்பட்டது.
சராசரி கொரில்லாவின் வலிமை, மனிதரைவிட 4 முதல் 10 மடங்கு அளவில் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கொரில்லா, 800 கிலோவுக்கும் அதிகமான எடையைத் தூக்கவல்லது. இது, ஒரு பளுதூக்கும் வீரரின் எடையைவிட இரு மடங்காகும். அதுமட்டுமின்றி, 1,810 கிலோ எடையை அழுத்தும் வலிமையும் கொரில்லாவுக்கு உண்டு.
இதையும் படிக்க: டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி

இது தெரியுமா? மனிதர்கள் எப்போது பேசக் கற்றுக் கொண்டார்கள்?
காட்டு தரிசனம் மனதால் பேசலாமா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



