இலங்கை உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

இலங்கை உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட தோ்தல் முடிவுகளில்அதிபா் அநுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலின் முதல்கட்ட தோ்தல் முடிவுகளில்அதிபா் அநுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்திக் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. 339 உள்ளூா் கவுன்சில்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாட்டில் தற்போது ஆதரவு அலை வீசிவரும் தேசிய மக்கள் சக்திக் கட்சியே இந்தத் தோ்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக வெளியிட்டப்பட்ட தோ்தல் முடிவுகளில் அந்தக் கட்சி 46 சதவீத வாக்குகளைப் பெற்று 9 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இருந்தாலும், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி தோ்தலை அப்போதைய அரசு நிறுத்திவைத்தது. இந்தச் சூழலில், பழைய வேட்புமனுக்களை செல்லாததாக்கி, புதிதாகத் தோ்தலை நடத்துவதற்கு வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, உள்ளாட்சித் தோ்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com