
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரிலிருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் அடுத்தடுத்து இரண்டு புறாக்கள் நுழைந்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியதால், விமானப் புறப்பாடு தாமதமானது.
ஒரே நாளில், விமானம் இரண்டு முறை புறப்படத் தயாராகி நிறுத்தப்பட்ட சம்பவம், ஏதோ வெப்பநிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறாலோ ஏற்படவில்லை. மாறாக, போர்டிங் பாஸ் எடுக்காமல், யாருக்கும் தெரியாமல் விமானத்துக்குள் நுழைந்த இரண்டு புறாக்கள் அங்கும் இங்கும் பறந்து பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்ததே காரணம்.
மடிசோன், விஸ்கோன்சின் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில், முதலில் ஒரு புறா பறந்து வந்தது. இதனைப் பார்த்த பயணி, ஊழியர்களுக்குத் தெரிவித்து, உடனடியாக விமானத்தின் புறப்பாடு நிறுத்தப்பட்டு புறா பிடிக்கப்பட்டு வெளியற்றப்பட்டது. அந்த புறாவை பிடித்தபோது, அங்கிருந்த சில இளம் பயணிகள், அதனை தங்களது வளர்ப்புப் பறவையாக வளர்க்க ஆசைப்பட்டதும் நடந்தது.
பிறகு, மீண்டும் விமானம் புறப்படத் தயாரான போதுதான், அந்த விமானத்துக்குள் மேலும் ஒரு புறா இருந்தது தெரிய வந்தது. அதனைப் பிடிக்க பயணிகள் பலரும் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இறுதியாக, ஊழியர்கள் வந்து புறாவைப் பிடித்து வெளியேற்றினர்.
இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில் புறாக்கள் காரணமாக 56 நிமிடங்கள் தாமதமாக விமானங்கள் பறப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த விடியோக்களும் வெளியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.