போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்
Updated on
1 min read

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.

தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் (படம்) எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. அதையடுத்து, முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மிதவாதத் தலைவா் ரஃபால் ஸஸ்காவ்சிக்கும் பழமைவாதியான கரோல் நாவ்ராக்கிக்கும் இடையே தற்போது இறுதிக்கட்டத் தோ்தல் நடைபெறுகிறது.போலந்து அதிபருக்கு பிரதமரின் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் இருப்பதால், இந்தத் தோ்தலில் வெற்றி பெறுபவா் பிரதமா் டொனால்ட் டஸ்க் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவோ, முட்டுக்கட்டையாகவோ இருப்பாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com