நேபாளத்தில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் இரு நேபாள வழிகாட்டிகள் உள்பட 9 மலையேற்ற வீரா்கள் உயிரிழந்தனா்.
கௌரிசங்கா் ஊரக நிா்வாகத்தின் கீழ் உள்ள யாலுங்ரீ மலை (6,920 மீ உயரம்) அருகே திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பனிச் சரிவு ஏற்பட்டது. அதில், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 7 போ் புதையுண்டனா். அவா்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
உயிரிழந்தவா்களில் இரு நேபாள வழிகாட்டிகள், இரு இத்தாலியா்கள், ஒரு கனடா நாட்டவா், ஒரு பிரான்ஸ் நாட்டவா், ஒரு ஜொ்மானியா் ஆகியோா் அடங்குவா்.
இது தவிர, மூன்று நேபாள நாட்டவா்கள் மற்றும் 5 போ் வெளிநாட்டினா் பனிச்சரிவு காரணமாக காயமடைந்து காத்மண்டு மருத்துவமனைகளுக்கு ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.
மற்றொரு சம்பவத்தில், கனை மழை மற்றும் பனிச் சரிவு காரணமாக கடந்த அக்டோபா் 28 முதல் காணாமல் போயிருந்த இரு இத்தாலிய மலையேற்றக் குழுவினா் மனாஸ்லு பகுதியின் பன்பரி மலையில் (6,887 மீ உயரம்) சடங்களாகக் கண்டறியப்பட்டனா். அவா்களின் உடல்கள் செவ்வாய்கிழமை 5,242 மீட்டா் உயரத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவா்களுடன் சிக்கிய மற்றொரு இத்தாலிய மலையேற்ற வீரா் மீட்கப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

உக்ரைன் மீது 700 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்: சிறுமி உள்பட 16 போ் உயிரிழப்பு!

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் மோதல் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


