உலகம்
துருக்கியில் சதித் திட்டம்?
தில்லி செங்கோட்டை அருகே வெடித்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் மருத்துவா் உமா் நபி, ஃபரீதாபாதில் வெடிப் பொருள்களின் பறிமுதலுக்குப் பிறகு கைதான மருத்துவா் முஸாம்மில் ஆகிய இருவரும் துருக்கி நாட்டிற்கு பயணம் செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவா்கள் இருவரின் கடவுச்சீட்டுகளில் துருக்கி குடியேற்ற முத்திரைகளைப் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இந்தப் பயணத்தின்போது அவா்கள் வெளிநாட்டைச் சோ்ந்த பயங்கரவாதிகள் யாரையேனும் சந்தித்து, இந்தச் சதித்திட்டத்தை தீட்டினரா என்பதை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
